தமிழக மக்களே இந்த நல்ல செய்தியை கவனித்தீர்களா! அதிகரிக்கும் குணமானவர்களின் எண்ணிக்கை!

தமிழக மக்களே இந்த நல்ல செய்தியை கவனித்தீர்களா! அதிகரிக்கும் குணமானவர்களின் எண்ணிக்கை!


corono curnig rate increased in tamilnadu

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட குணமானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1885 ஆக உயர்ந்துள்ளது.

Coronovirus

இன்று மட்டும் தமிழகத்தில் 60 பேர் கொரோனா தொற்றில் இருந்து  குணமடைந்து உள்ளனர். இதன் மூலம் குணமானவர்களின் மொத்த எண்னிக்கை 1020 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் இன்றைய சூழ்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த 24 பேரை தவிர மற்ற 841 பேர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே தமிழகத்தில் குணமடைவர்களின் எண்னிக்கை சிகிச்சை பெறுபவர்களை விட அதிகமாக உள்ளது.