தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.! ஆனால் அதிகரித்த உயிரிழப்பு.! சென்னையில் மட்டும் 98 பேர் பலி.!

தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு.! ஆனால் அதிகரித்த உயிரிழப்பு.! சென்னையில் மட்டும் 98 பேர் பலி.!



corona reduced in tamilnadu

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2வது அலை தீவிரமாக பரவி பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இந்தநிலையில், தமிழகத்தில் அதிகரித்துவரும் கொரோனா பாதிப்பினால் நாள்தோறும் பல ஆயிரம் மக்கள் பாதிக்கப்பட்டும், 400 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தும் வந்தனர். 

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மே 24 வரை பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, தளர்வுகள் இல்லாத ஊரடங்காக மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 33,764 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 

corona

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 3,561 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் 475 பேர் கொரானா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் 98 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். தமிழகத்தில் சமீப காலமாக கொரானா பாதிப்பு 35 ஆயிரத்தை கடந்துவந்தநிலையில், தளர்வுகள் இல்லாத ஊரடங்கிற்கு பிறகு கொரானா பாதிப்பு குறைய துவங்கியுள்ளது.