துக்க நிகழ்ச்சிகளில் இப்படியொரு கேவலமான செயலா.? பிஹைண்ட்வுட் சேனலின் அதிரடி அறிவிப்பு.!
இன்றும் குறையாத கொரோனா இறப்பு எண்ணிக்கை.! புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 120 பேர் பலி..
இன்றும் குறையாத கொரோனா இறப்பு எண்ணிக்கை.! புதிதாக 5,890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. 120 பேர் பலி..

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து அன்றாட நிலவரம், பாதிப்பு எண்ணிக்கை குறித்த தகவல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுவருகிறது. அந்த வகையில் இன்று வெளியான தகவலின்படி இன்று மட்டும் தமிழகத்தில் புதிதாக 5,890 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்தவரை இன்று மட்டும் 1,185 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வெளியான தகவலின்படி 120 பேர் (அரசு மருத்துவமனை - 84, தனியார் மருத்துவமனை - 36) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் மொத்த பலி எண்ணிக்கை 5,886 ஆக உயர்ந்துள்ளது.
சற்று ஆறுதலாக தமிழகம் முழுவதும் இன்று மட்டும் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 2,83,937 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 54,122 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.