கொடூரமாக கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி... கணவன் மனைவி உட்பட 5 பேர் கைது.!

கொடூரமாக கொலை செய்யப்பட்ட கட்டிட தொழிலாளி... கணவன் மனைவி உட்பட 5 பேர் கைது.!



construction-worker-who-was-brutally-murdered-five-peop

விழுப்புரம் அருகே  உறவினர்களுடன் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை.

விழுப்புரம் மாவட்டம் வில்லியனூர் பகுதியைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(35). கட்டிட தொழிலாளி அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டாயா என்ற மனைவியும் இரண்டு  குழந்தைகளும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில்  அரி கிருஷ்ணன் பெரியப்பா   சுப்பிரமணியத்தின் மகன் ஆனந்தராஜ் வசித்து வந்தார். இவர் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

tamilnadu.இரு குடும்பத்திற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக பகை இருந்து வந்திருக்கிறது. இந்நிலையில் ஆனந்தராஜின் வீட்டிலிருந்த சருகுகள் அரி கிருஷ்ணனின் வீட்டில் விழுந்ததால் அவரது மனைவி தட்டிக் கேட்டிருக்கிறார் இது தொடர்பாக  ஆனந்த ராஜன் மனைவி அவரை அசிங்கமாக பேசி உள்ளார். வேலை முடிந்து வீடு திரும்பியதும் அரிகிருஷ்ணன் இடம் விதை தெரிவித்திருக்கிறார் அவரது மனைவி.

tamilnadu.இதனைத் தொடர்ந்து நேற்று இரவு இரண்டு குடும்பத்திற்கும் இடையே மீண்டும் சண்டை வடித்திருக்கிறது. அப்போது பாத்திரத்தில் ஆனந்தராஜ்  அவரது மனைவி மற்றும் மூன்று மகன்கள் சேர்ந்து  அரி கிருஷ்ணனை பலமாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜ் அவரது மனைவி  மற்றும் மூன்று மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.