திருவாரூர்: ஆத்திரம் தீர அடித்தே கொன்றேன்..! மாமியாரின் அதிரடி வாக்குமூலம்..!

திருவாரூர்: ஆத்திரம் தீர அடித்தே கொன்றேன்..! மாமியாரின் அதிரடி வாக்குமூலம்..!


confession-of-mother-in-law-who-killed-daughter-in-law

திருவாரூர் மாவட்டத்தில், மருமகளுக்கு குழந்தை இல்லாததால் அவரது மாமியார் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை அடுத்த கருங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் வாடகை பாத்திரக்கடை வைத்துள்ளார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை அடுத்த துவரங்குறிச்சி சேர்ந்த தனலட்சுமி என்பவரை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் கடந்த 21ஆம் தேதியன்று மகேந்திரன் தொழில் சம்பந்தமாக வெளியூர் சென்றிருக்கிறார்.

அப்போது தனலட்சுமி சிறிய வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்திருக்கிறார். பெரிய வீட்டில் மாமியார் ரஞ்சிதம் நாத்தனார் மகளும் தூங்கி இருக்கிறார்கள். மறுநாள் 22ஆம் தேதி காலையில் நீண்டநேரம் ஆகியும் தனலட்சுமி எழுந்து வராததால் உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, தனலட்சுமி ரத்த காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டு கிடந்திருக்கிறார்.

தகவலறிந்த முத்துப்பேட்டை காவல்துறையினர் தனலட்சுமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பின்னர், மாமியார் ரஞ்சிதம் கணவர் மகேந்திரன் அவரது சகோதரி மகள் விஜயராமன் விநாயகம் என அனைவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

விசாரணையில் தனலட்சுமியை கொலை செய்ததாக நாத்தனார் மகன்களும் மாமியாரும் ஒப்புக்கொண்டுள்ளனர். மருமகள் சொத்தைப் பிரித்துக் கொடுக்க சொல்லி வற்புறுத்தி வந்ததாகவும் அதனால் ஆத்திரமடைந்து தனலட்சுமியை ரஞ்சிதம் அடித்து கொன்றதாகதாகவும் கூறியுள்ளனர். மேலும் குழந்தை இல்லாத உனக்கு எதுக்கு சொத்து என்று ரஞ்சிதம் சண்டை போட்டுள்ளார். இந்த சண்டையில் ரஞ்சிதம் தனது பேரனுடன் சேர்ந்து தனது மருமகளை அடித்துக் கொலை கொலை செய்துள்ளார்.

இதற்கிடையில் தனலட்சுமியை வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக தனலட்சுமியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். இதனடிப்படையில் தனலட்சுமியின் கணவர் மகேந்திரன் நாத்தனார் மகன் ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு திருத்துறைப்பூண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.

தலைமறைவாக இருக்கும் இரண்டு நாத்தநார்களையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். மாமியார் ரஞ்சிதம் அளித்த வாக்குமூலத்தின்படி, மருமகளுக்கு 10 வருடங்களாக குழந்தை இல்லாததால் இருவருக்கும் அடிக்கடி தகராறு நடக்கும் என்றும், முதல் நாள் இரவும் எங்களுக்கு அப்படித்தான் தகராறு நடந்தது என்றும், அந்த ஆத்திரத்தில் இருந்த நான் தூங்கிக் கொண்டிருந்த தனலட்சுமி தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதால் தனலட்சுமி வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டு துடித்ததால் இரண்டாவது பேரன் துணையோடு இரும்பு சாரணியால் முகத்தில் கோபம் தீர அடித்து கொன்றேன் என்று அதிர்ச்சி வாக்குமூலம் அளித்திருக்கிறார்.