#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
ஆசிரியைக்கு ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவர்! அதிர்ச்சியில் ஆசிரியை செய்த செயல்
ஆசிரியைக்கு ஆபாச படம் அனுப்பிய கல்லூரி மாணவர்! அதிர்ச்சியில் ஆசிரியை செய்த செயல்
சென்னையில் ஆசிரியை ஒருவருக்கு தொடர்ந்து ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பிய கல்லூரி மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை அயனாவரம் காவல் நிலையத்திற்கு ஆசிரியை ஒருவர் தனது குடும்பத்தாருடன் புகார் அளிக்க வந்துள்ளார். அந்த புகாரில், "சில நாட்களுக்கு
முன்பு, தனக்கு யாரென்றே தெரியாத ஒரு நபரின் மொபைல் எண்ணிலிருந்து ஆபாச தகவல்கள் வந்தன. முதலில் யாரோ தவறாக அனுப்பி இருக்கலாம் என எண்ணி அப்படியே விட்டுவிட்டேன். பிறகு சில நாட்கள் கழித்து மீண்டும் அதே எண்ணிலிருந்து ஆபாச புகைப்படங்களும் அடிக்கடி வருகிறது. இதனால் எனக்கு மிகவும் மன வேதனையாக இருக்கிறது. நான் எத்தனையோ முறை எச்சரித்தும் அந்த நபர் அதனை நிறுத்திக்கொள்வதாக இல்லை" என புகார் அளித்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் வழக்கை ஏற்ற அயனாவரம் போலீசார் அந்த மர்ம நபரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆபாச புகைப்படங்கள் வந்த எண் எங்கிருந்து வந்தது. அந்த எண் யாருடையது என்று தீவிர விசாரணையில் இறங்கினர்.
கடைசியில் அந்த நபர் சென்னை, அசோக் நகரில் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. அந்த நபரின் முகவரியை கண்டுபிடித்த போலீசார் அசோக்நகர் சென்றனர். அங்கு ஆகாஷ் மற்றும் ராஜேஷ் என்ற இரு நண்பர்களை போலீசார் பிடித்தனர். ஆகாஷ் சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பு இறுதியாண்டு படித்து வருகிறார். அவர்களின் பெற்றோரிடம் நடந்ததை கூறியுள்ளனர். இதைக் கேட்டு இருவரின் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அந்த இருவரையும் தொடர்ந்து விசாரித்ததில் அவர்கள் தான் ஆசிரியைக்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார்கள் என உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.