தனியார் பேருந்து மோதி தந்தை, 3 வயது மகன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 

தனியார் பேருந்து மோதி தந்தை, 3 வயது மகன் பரிதாப பலி; நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்.! 



Coimbatore Man and 3 Aged Child Died an Accident Wife Undergoing Treatment on Hospital 

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் அசோக் குமார் (வயது 32). இவரின் மனைவி சுசீலா (வயது 30). தம்பதிகளுக்கு 3 வயதுடைய மகன் இருக்கிறார். 

கடந்த பிப்ரவரி 09ம் தேதி பெரியபாளையம் பகுதியில் இவர்கள் இருசக்கர வானகத்தில் சென்றுகொண்டு இருந்தனர். அச்சமயம் இருசக்கர வாகனத்தின் மீது அசுரவேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதியது. 

இந்த விபத்தில் அசோக் குமார் மற்றும் அவரின் 3 வயதுடைய மகன் சர்வானந்த் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுசீலா மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டார். 

இந்த விபத்து குறித்த பதைபதைப்பு காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.