#BigBreaking: கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் 100 சவரன் தங்கநகைகள் கொள்ளை: ஒற்றை கொள்ளையன் அதிர்ச்சி செயல்?.!

#BigBreaking: கோவை ஜோஸ் ஆலுகாஸ் நகைக்கடையில் 100 சவரன் தங்கநகைகள் கொள்ளை: ஒற்றை கொள்ளையன் அதிர்ச்சி செயல்?.!



Coimbatore Gandhipuram Jos Alukkas Jewellery Shop Gold Jewel Robbery

 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காந்திபுரம், 100 அடி சாலையில் ஜோஸ் ஆலுகாஸ் தங்க நகைக்கடை செயல்பட்டு வருகிறது. 

இந்நிலையில், நேற்று இரவு நகைக்கடைக்கு வந்த மர்ம நபர், 100 சவரன் அளவிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் தற்போது தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

கடையில் புகுந்து கொள்ளையடித்தது யார்? என்ற விசாரணையில், சாரம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகிக்கப்பட்டுள்ளது. 

இதனால் நிகழ்விடத்தில் இருக்கும் சிசிடிவி கேமிராக்கள் ஆய்வு செய்யப்பட்டு, விசாரணை துரிதமாக நடந்து வருகிறது.