2 மாணவிகளுக்கு வந்த காதலால் 30 மாணவிகளுக்குள் வந்த கோஷ்டி மோதல்..!!

2 மாணவிகளுக்கு வந்த காதலால் 30 மாணவிகளுக்குள் வந்த கோஷ்டி மோதல்..!!



Clash of 30 students due to love between 2 students

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு புதுராமகிருஷ்ணாபுரத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ளது. இங்கு 600 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் காட்டுப்பகுதியில் திரண்ட அந்த பள்ளியை சேர்ந்த 30-க்கும் அதிகமான மாணவிகள் கூடி ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டனர்.

பள்ளி மாணவிகள் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பகுதி மக்கள் உடனே மாணவிகளின் மோதலை தடுத்து நிறுத்தினர். அதன் பின்னர் மாணவிகளிடம் மோதலுக்கான காரணம் குறித்து கேட்டனர். அப்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவி மாணவன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

இந்த நிலையில் மாணவனுக்கு வேறொரு மாணவி வாட்ஸ் அப்பில் பல்வேறு தகவல்களை அனுப்பியுள்ளார். மேலும் வாட்ஸ் அப் மூலம் பேசி வந்துள்ளார்.  இது தெரிந்த அந்த மாணவனை காதலித்து வந்த மாணவி, என் காதலனுடன் எப்படி சாட்டிங் செய்யலாம் என்று கேட்டுள்ளார்.

இது குறித்து மாணவிகளுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் இந்த பிரச்சினை குறித்து பேசி தீர்த்து கொள்ள இரண்டு மாணவிகளும் தங்களின் தோழிகளை புதுராமகிருஷ்ணாபுரம் பவானிநகர் பகுதியில் இருக்கும் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு இரு தரப்பு மாணவிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரு தரப்பு மாணவிகளும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர் அங்கிருந்த மக்கள் இதை பார்த்து தடுத்து நிறுத்தியுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகிறார். காதல் விவகாரத்தில் பள்ளி மாணவிகள் ஒரு மாணவனுக்காக சண்டையில் ஈடுபட்ட சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.