கடன் வாங்கி முதலீடு; தொழில் நஷ்டமானதால் ஆசிரியை கணவருடன் சேர்ந்து தற்கொலை; தவிக்கும் குழந்தைகள்.!

கடன் வாங்கி முதலீடு; தொழில் நஷ்டமானதால் ஆசிரியை கணவருடன் சேர்ந்து தற்கொலை; தவிக்கும் குழந்தைகள்.!



Chennai Tambaram Couple Died Due to Loan Issue 

 

சென்னையில் உள்ள தாம்பரம், சிட்லபாக்கம் கல்யாண சுந்தரம் தெருவில் வசித்து வருபவர் பொன்னுதாஸ் (வயது 48). இவர் திருமுடிவாக்கம் பகுதியில் ஏ.கே ஆட்டோமொபைல் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். பொன்னுதாஸின் மனைவி ஜான்சி ராணி (வயது 45). குன்றத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்க்கிறார். 

தம்பதிகளுக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். மூத்தவர் கல்லூரியிலும், மற்றொருவர் 9ம் வகுப்பிலும் படித்து வருகிறார். இருவரும் நேற்று பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்தபோது தாய்-தந்தை வீட்டில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.  

chennai

பின், இதுகுறித்து சிட்லபாக்கம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில், பொன்னுதாஸ் தனது நிறுவனத்திறன் வளர்ச்சிக்காக ரூ.1 கோடி அளவில் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கியுள்ளார். 

ஆனால், எதிர்பாராத விதமாக தொழிலில் நஷ்டம் ஏற்படவே, கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு நெருக்கடி அளித்து வந்துள்ளனர். இதனால் தம்பதிகள் இருவரும் மனஉளைச்சலில் இருந்து வந்த நிலையில், இறுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தம்பதிகளை யாரேனும் மிரட்டி வந்தாரா? என விசாரணை நடந்து வருகிறது.