17 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆங்கில ஆசிரியை: ஆசைகாட்டி அத்துமீறிய பகீர் சம்பவம்.!

17 வயது மாணவருடன் ஓட்டம் பிடித்த ஆங்கில ஆசிரியை: ஆசைகாட்டி அத்துமீறிய பகீர் சம்பவம்.!



Chennai Solinganallur Women Teacher Love Affair with Student 

 

சென்னையில் உள்ள கேளம்பாக்கம், பொன்மார் கிராமத்தில் வசித்து வரும் 11ம் வகுப்பு மாணவர், சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்படும் பள்ளியில் படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி சென்றவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் பெற்றோர் தாழம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  

புகாரை ஏற்ற அதிகாரிகள் நடத்திய விசாரணையில், சிறுவன் பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியையுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது. இவர் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்னதாக கோவைக்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, காவல் துறையினர் கோவைக்கு விரைந்து ஆசிரியரை கைது செய்து மாணவனை மீட்டனர். விசாரணையில், குமரி மாவட்டம் வில்லுக்குறி பகுதியை சேர்ந்த ஆசிரியை எப்சிபா (வயது 28), 2018ல் திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். 

ஒன்றரை ஆண்டுக்கு முன்னதாக சோழிங்கநல்லூர் பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் வேலைக்கு சேர்ந்த நிலையில், மாணவருடன் பழகி தனியாக வரவழைத்து அத்துமீறி நடந்தது தெரியவந்தது. பின்னாளில் இவை வெளியே தெரிந்தால் அவமானமாகும் என வேலையை இராஜினாமா செய்துவிட்டு கோவை சென்றுவிட்ட நிலையில், மாணவர் ஆசிரியையை விட மனமில்லாமல் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் அவரையும் தன்னுடன் அழைத்து சென்றது தெரியவந்தது.

போக்ஸோ சட்டத்தின் கீழ் ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை சிறையில் அடைத்தனர்.