போலி ஆவணங்கள் கொடுத்து ரூ2.76 கோடி கடன் பெற்று மோசடி.. 2 பேர் கைது., பரபரப்பு தகவல்..!

போலி ஆவணங்கள் கொடுத்து ரூ2.76 கோடி கடன் பெற்று மோசடி.. 2 பேர் கைது., பரபரப்பு தகவல்..!



chennai-police-arrested-2-cheating-people

தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2 கோடியே 76 லட்சம் கடன் பெற்ற இருவரை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் உள்ள தி.நகர் பகுதியில் தனியார் பைனான்ஸ் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், அங்கு சென்ற ரவி மற்றும் மஞ்சு என்ற இருவர், தாங்கள் கடந்த 2017 ஆம் ஆண்டு M.R Garden Service நிறுவன உரிமையாளர்கள் எனக்கூறி கடன் பெற்றுள்ளனர். 

மேலும், இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு இடத்தின் ஆவணத்தை அடமானம் வைத்துள்ளனர். தொடர்ந்து வந்தவர்கள் பெரிய இடம் என்பதால் நிதி நிறுவன அலுவலர்களும் உடனடியாக ஆவணத்தை வாங்கிக் கொண்டு பணம் அளித்துள்ளனர். chennaiபின் அவர்கள் சென்றபிறகு ஆவணத்தை சரிபார்த்த போது, அவைகள் போலியானவை என தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் உடனடியாக காவல்துறையினரிடம் புகாரளித்த நிலையில், புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மஞ்சு, ரவி ஆகிய இருவரையும் தேடி பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2 கோடியே 76 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக அவர்களே ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.