7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

7 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



chennai meotrological centre announced rainfall in 7 districts

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான செய்தித்தொகுப்பில், 17ஆம் தேதியான இன்று, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

18ஆம் தேதியன்று தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகிரி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், பெரம்பலூர், திண்டுக்கல், கரூர், தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Meotrological centre

தலைநகர் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையானது 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.