அந்த விஷயம் அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு.. 18 வயது மகன் எடுத்த முடிவால் விபரீதம்.!

அந்த விஷயம் அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு.. 18 வயது மகன் எடுத்த முடிவால் விபரீதம்.!


Chennai Maduravoyal Alapakkam 12 th Standard Student Suicide

குறைந்த மதிப்பெண் எடுத்த விஷயம் தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என பயந்த மகன் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள மதுரவாயல், ஆலப்பாக்கம் பகுதியை சார்ந்தவர் முனுசாமி. இவர் தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ராஜன் (வயது 18).

ராஜன் தந்தை பணியாற்றி வரும் பள்ளியிலேயே பனிரெண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ராஜன் சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் குறைந்தளவு மதிப்பெண் எடுத்ததாக தெரியவருகிறது. 

குறைந்த மதிப்பெண் எடுத்த விவகாரம் தந்தைக்கு தெரியவந்தால், தந்தை திட்டுவார் என்று பயத்தில் இருந்து வந்த ராஜன், நேற்று மாலை நேரத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். 

chennai

இதனால் படுகாயம் அடைந்த ராஜனை மீட்ட குடும்பத்தினர், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்ய முற்பட்டனர். ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த மதுரவாயல் காவல் துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.