இளைஞருடன் பேசிய சிறுமியை கண்டித்ததால், 6 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி.!

இளைஞருடன் பேசிய சிறுமியை கண்டித்ததால், 6 ஆம் வகுப்பு மாணவி தற்கொலை.. விசாரணையில் அதிர்ச்சி.!



Chennai Kundrathur 6 th Class Child Suicide

சென்னையில் உள்ள குன்றத்தூர் துரைசாமி முதலி தெருவை சேர்ந்தவர் சிவா. இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி வசந்தி. இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு நவீன் என்ற 8 வயது மகனும், வைஷ்ணவி என்ற 13 வயது மகளும் உள்ளனர். 

சிறுமி வைஷ்ணவி கோவூரில் செயல்பட்டு வரும் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். நேற்று முன்தினம் பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்ட நிலையில், இரவு நவீன் விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் கதவு உட்புறமாக தாழிடப்பட்டு இருந்த நிலையில், ஜன்னல் வழியாக நவீன் எட்டிப்பார்க்கையில் அக்கா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

chennai

சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து வைஷ்ணவியின் உடலை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் சிறுமி வசித்து வரும் பகுதியில் உள்ள இளைஞருடன் அவர் பேசியுள்ளார். அதனை கவனித்த இளைஞரின் பெற்றோர், சிறுமியை எச்சரித்து, உனது பெற்றோர் வந்ததும் தெரிவிக்கிறோம் என்று கண்டித்து சென்றுள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுமி பயத்தில் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரியவருகிறது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.