ஆன்லைனில் கடன் வாங்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஐ.டி ஊழியர்; சென்னையில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!

ஆன்லைனில் கடன் வாங்கி உயிரை மாய்த்துக்கொண்ட ஐ.டி ஊழியர்; சென்னையில் நெஞ்சை உலுக்கும் சோகம்.!



Chennai KK Nagar IT Employee Suicide Online Loan Issue

சென்னையில் உள்ள கே.கே நகர் பகுதில் வசித்து வருபவர் நரேந்திரன். இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவர் கடன் தேவைக்காக ஆன்லைன் செயலி மூலமாக கடன் வாங்கியதாக தெரியவருகிறது. 

ஆன்லைன் கடன் பெற்றவர் மீண்டும் அதனை திரும்ப அடைக்க இயலாத விரக்தியில் இருந்து வந்த நிலையில், அவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

chennai

இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த கே.கே நகர் காவல் துறையினர், நரேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.