கோடை வெப்பத்தை தணிக்க வருகிறது கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! எங்கெங்கு மழை?..!

கோடை வெப்பத்தை தணிக்க வருகிறது கனமழை... சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..! எங்கெங்கு மழை?..!


chennai-imd-weather-report-RSXJZR

சென்னை வானிலை ஆய்வு மையம் என்ற வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 3 ஆம் தேதியான இன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். 4 ஆம் தேதி மற்றும் 5 ஆம் தேதிகளில் தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

chennai

6 ஆம் மற்றும் 7 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தலைநகர் சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக ஏப்ரல் 6-ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்க கடல் பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். அடுத்த 24 மணிநேரத்தில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இதனால் 6 ஆம் தேதி தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசலாம் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.