காதல் திருமணம் செய்து மாமியாரை கொன்ற இளைஞர்; 30 ஆண்டுகள் கழித்து கைதான குற்றவாளி.! குடும்பமே அதிர்ச்சி.!

காதல் திருமணம் செய்து மாமியாரை கொன்ற இளைஞர்; 30 ஆண்டுகள் கழித்து கைதான குற்றவாளி.! குடும்பமே அதிர்ச்சி.!



Chennai Guindy Murder Case 30 Year Old Accuse Arrest at The age Of 72 

 

ஒடிசா மாநிலத்தைச் சார்ந்தவர் ஹரிபட்டா ஜோசி (வயது 72). இவர் கடந்த 1993-ம் ஆண்டு கிண்டியில் செயல்பட்டு வந்த தனியார் நிறுவனத்தில் சமையல் ஆளாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அங்கு வேலை பார்த்து வந்த ஆதம்பாக்கம் நகர் பகுதியை சார்ந்த ரமா என்பவரின் மகள் இந்திராவை காதலித்துள்ளார். 

இந்த உண்மையை அறிந்த ரமா தனது மகளை 1994-ல் திருமணம் செய்து கொடுத்தார். இருவரும் ஆதம்பாக்கம் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தனியாக தங்கியிருந்த நிலையில், மொழி பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்திராவை கணவர் ஜோசி சித்திரவதை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்திரா திருமணம் முடிந்த 15 நாட்களிலேயே கணவரைப் பிரிந்து தாயின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஹரி 1995-ம் ஆண்டு தனது மாமியாரின் வீட்டிற்கு சென்று மனைவியை குடித்தனம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு இந்திரா மறுப்பு தெரிவிக்கவே, ஆத்திரமடைந்த அவர் தனது மாமியார் ரமாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். 

மேலும் இந்திராவின் சகோதரர் கார்த்திக்கின் மீதும் தாக்குதல் நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ஆதம்பாக்கம் காவல்துறையினர் ஜோசியை தேடிய நிலையில், அவர் தனது ஒடிசா மாநிலத்திற்கு தப்பிச் சென்றார். 1996-ம் ஆண்டு முதல் 2006 வரை அவரை காவல்துறையினர் கைது செய்ய இயலவில்லை. 

அவர் எங்கு இருக்கிறார் என்றும் தெரியவில்லை. இதனால் 28 ஆண்டுகளாக வழக்கு கிடப்பில் இருந்த நிலையில், தற்போது தனிப்படை காவல்துறையினர் அமைக்கப்பட்டு குற்றவாளி தீவிரமாக தேடப்பட்டு வந்தார். இந்நிலையில் ஹரிபட்டா ஜோசியை தேடி ஒடிசா சென்ற தனிப்படை காவல்துறையினர், கஞ்சம் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக முகாமிட்டு விக்ரம்பூர் பகுதியில் அவரை கைது செய்தனர்.

தற்போது அவருக்கு 54 வயதாகிறது. அவர் கொலை செய்து சில ஆண்டுகள் சொந்த ஊருக்கு செல்லாமல் இருந்த நிலையில், வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார். காவல்துறையினர் கைது செய்த பின்னர் தான், தனது கணவர் ஏற்கனவே திருமணமாகி இருப்பது அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. 

தனிப்படை காவல்துறையினருக்கு கஞ்சம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரான புதுச்சேரி மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட சரவணன் விவேக் உதவி செய்ததை அடுத்து குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.