மின் மயானம் 20 நாட்கள் இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!

மின் மயானம் 20 நாட்கள் இயங்காது - சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!!



Chennai Corporation Announce Porur Electric Crematorium Under Maintenance Wont work Next 20 Days

சென்னை பெருநகர மாநகராட்சிக்கு உட்பட்ட வளசரவாக்கம், போரூரில் மின் மயானம் செயல்பட்டு வருகிறது. இந்த மின் மயானத்தில் பராமரிப்பு பணிகள் நடத்த மாநகராட்சியின் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. 

இதனைதொடர்ந்து, பராமரிப்பு பணிகளுக்கான வேலைகள் தொடங்கவுள்ள நிலையில், போரூர் மின் மயானம் வரும் மார்ச் 22 ஆம் தேதி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

chennai

மேலும், போரூர் மின் மயானத்திற்கு பதிலாக, வரும் 20 நாட்கள் பொதுமக்கள் பிருந்தாவன் நகரில் உள்ள மயானத்தை உபயோகம் செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் சென்னையில் நிரம்பி வழிந்த மாயனங்களுள் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.