சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது! தமிழக அரசு முடிவு!

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் இரண்டாக பிரிகிறது! தமிழக அரசு முடிவு!



Chennai anna university gonna split into two

இந்தியாவில் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஓன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகம். இதன் கட்டுப்பாட்டில் பல்வேறு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக  5 அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து அரசாணை வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிதாக ஒரு பல்கலைக்கழகம் தொடங்கப்படும் எனவும், அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை அடிப்படையில் தமிழக அரசு முடிவு செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Anna university

மேலும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் எனவும், தமிழக அரசு பின்பற்றும் இட ஒதுக்கீட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படக் கூடாது,  மாநில அரசின் கட்டுப்பாட்டில்தான் அண்ணா பல்கலைக்கழகம் இயங்கவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.