இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை: மதுராந்தகம் அருகே அதிர்ச்சி.!

இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொடூர கொலை: மதுராந்தகம் அருகே அதிர்ச்சி.!



Chengalpattu Man Killed Stone Throwed on Head 

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம், குமாரவாடி கிராமத்தில் உள்ள வீட்டு மனை ஒன்றில் 35 வயது நபரின் சடலம் கிடடந்தது. இந்த விஷயம் தொடர்பாக படாளம் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள், இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், இளைஞரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து, அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், கொலை செய்யப்பட்டவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.