எதிரெதிரே மோதிக்கொண்ட சரக்கு லாரிகள்.. ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம்..!

எதிரெதிரே மோதிக்கொண்ட சரக்கு லாரிகள்.. ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் படுகாயம்..!



Cargo trucks that collided opposite each other.. One was killed while the other was seriously injured..!

மதுரை மாவட்டம் கூடலுார் புதூரை பகுதியில் பாலசுப்ரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மினி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் பாலசுப்ரமணியன் தனது மினி லாரியில் சரக்கு ஏற்றிக்கொண்டு தொண்டியில் இருந்து மதுரைக்கு வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் காளையார்கோவில் அருகே உள்ள அழகாபுரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த சரக்கு வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது.

accident

இதில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் எதிரே வந்த வாகனத்தை ஓட்டிய நாகப்பட்டினத்தை சேர்ந்த தயாநிதி பலத்த காயமடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் தயாநிதியை மீட்டு காளையார்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பாலசுப்ரமணியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.