#JUSTIN || புழலில் கல்லா கட்டிய கஞ்சா வியாபாரம்! சிக்கிய சிறைக்காவலர்!! 

#JUSTIN || புழலில் கல்லா கட்டிய கஞ்சா வியாபாரம்! சிக்கிய சிறைக்காவலர்!! 



 Cannabis distribute in Puzhal Prison

புழல் ஜெயிலில் இருக்கும் ஏ.ஆர்.டி ஜூவல்லர்ஸ் நிறுவன உரிமையாளர் ஆல்வின் அறையிலிருந்து போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவருக்கு கஞ்சா விநியோகம் செய்ததாக சிறைகாவலரான திருமலை நம்பிராஜா என்பவரை சஸ்பெண்ட் செய்ய சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வாங்கியதற்காக 6 புழல் சிறை கைதிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறை காவலர் திருமலை நம்பி ராஜா என்பவர் சிறை கைதிகளுக்கு போதை மாத்திரை மற்றும் கஞ்சா சப்ளை செய்தது கண்டுபிடிப்பு.

இதனை தொடர்ந்து, சிறை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.