முன்னாள் காதலனுடன் பழகிய திருமணமான அக்காவுக்கு தம்பியால் நேர்ந்த கொடூரம்!

முன்னாள் காதலனுடன் பழகிய திருமணமான அக்காவுக்கு தம்பியால் நேர்ந்த கொடூரம்!



Brother killed married sister and lover in madurai

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கொம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார். கம்பி கட்டும் தொழிலாளியான இவர் அதே கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மகாலட்சுமி வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மகாலட்சுமியை வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் திருமணமான ஒரே வாரத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கு மகாலட்சுமி வந்துவிட்டார். இதனிடையே தனது முன்னாள் காதலனான சதீஷ்குமார் உடன் பேச தொடங்கியுள்ளார்.

madurai

இதனையறிந்த மகாலட்சுமியின் தம்பி பிரவீன் குமார் தனது அக்காவையும், சதீஷ்குமாரையும் எச்சரித்துள்ளார். ஆனால் இதனை இவர்கள் இருவரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் நெருங்கி பழகி வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த தம்பி பிரவீன் குமார் அவர்கள் இருவரையும் கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

அதன்படி நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த சதீஷ்குமாரை வழிமறித்த பிரவீன் குமார் அவரது முகத்தில் மிளகாய் பொடியை தூவி அரிவாளால் வெட்டியுள்ளார். அதன் பின்னர் அங்கிருந்து நேராக வீட்டிற்கு சென்று அவரது சகோதரி மகாலட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

madurai

இதனை தடுக்க வந்த தனது அம்மாவின் கையையும் வெட்டியுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பிரவீன் குமாரை தேடி வருகின்றனர்.