ஆஹா சூப்பர்... அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.! உச்சக்கட்ட குஷியில் அரசுப்பள்ளி மாணவர்கள்.!

ஆஹா சூப்பர்... அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அசத்தலான அறிவிப்பை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.! உச்சக்கட்ட குஷியில் அரசுப்பள்ளி மாணவர்கள்.!



Breakfast for govt school students

தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைப்பெற்று மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில், திமுக கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. முதலமைச்சராக பொறுப்பேற்று ஓராண்டு நிறைவை ஒட்டி, சட்டசபையில்  மு.க.ஸ்டாலின்  உரையாற்றினார்.

அப்போது அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.  அதில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும் திட்டம். முதற்கட்டமாக 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம். அனைத்து மாணவர்களுக்கும் படிப்படியாக விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

முதற்கட்டமாக மாநகராட்சி, தொலைதூர கிராமங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவு செய்யப்படும் என தெரிவித்தார்.