திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவில் தகராறு.. அந்தரங்க வீடியோவை வெளியிட்ட இளைஞர்!

திருமணமான பெண்ணுடன் ஏற்பட்ட தகாத உறவில் தகராறு.. அந்தரங்க வீடியோவை வெளியிட்ட இளைஞர்!



Boy upload private pictures of lover

தர்மபுரி அருகே தகாத உறவில் ஏற்பட்ட தகராறில் ஆபாச புகைப்படங்களை வெளியிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கென்டையனள்ளி பகுதியைச் சேர்ந்தவர் இன்பசேகரன். பிஇ பட்டதாரியான இவருக்கு, இன்னும் திருமணமாகவில்லை. தற்போது இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

Dharmapuri

இந்த நிலையில் இன்ப சேகரனுக்கு, அதே பகுதியில் வசிக்கும் கணவரை பிரிந்து வசித்து வந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டு, தகாத உறவாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டு உல்லாசமாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து இன்பசேகரன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இதனிடையே அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த இன்ப சேகரன் அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

Dharmapuri

இதுகுறித்து அறிந்த இளம் பெண் போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்ப செயலினை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.