அண்ணன் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

அண்ணன் மனைவியை வெட்டிக்கொன்ற தம்பி.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!



Boy killed brother wife in tuticorin

தூத்துக்குடி அருகே உள்ள ஒட்டப்பிடாரம் பகுதியில் உள்ள எப்போதும் வென்றான், கீழத்தெரு பகுதியை சேர்ந்தவர் சின்னமணி. இவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். சின்ன மணிக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதில், சின்ன மணியின் கணவர் வைரமுத்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து சின்னமணி கணவர் இறப்பிற்கு பிறகு தூத்துக்குடி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதியில் தனது குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

Tuticorin

இந்த நிலையில் தனது சொந்த ஊரில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போதே அவரது மகளுடன் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வைரமுத்துவின் தம்பியான ராஜேஷ் கண்ணன், சின்னமணியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ராஜேஷ் கண்ணன் தான் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் சின்னமணியை வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.

Tuticorin

இதனையடுத்து தகவலறிந்த போலீசார் தப்பி சென்ற ராஜேஷ் கண்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தனது அண்ணன் இறந்த பிறகு சின்னமணி தனது அரவணைப்பில் இருந்ததாகவும், அவருக்கு சில ஆண்களுடன் தொடர்பு இருந்ததால் வெட்டி கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.