திருநங்கையோடு காதல்..! ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்த திலீப் - சிவானி..!ஒருநாள்..! கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!

திருநங்கையோடு காதல்..! ஒரே வீட்டில் கணவன் மனைவியாக வாழ்ந்த திலீப் - சிவானி..!ஒருநாள்..! கதவை திறந்தபோது காத்திருந்த அதிர்ச்சி..!



Boy commit suicide with transgender

திருநங்கை ஒருவரை காதலித்த இளைஞர் அவருடன் சேர்ந்து வாழ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியுடன் சேர்ந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாற்றை சேர்ந்தவர் திலீப். 26 வயதாகும் இவர்  நிறுவனம் ஒன்றில் டெக்னீஷியனாக வேலை பார்த்துவந்துள்ளார். இந்நிலையில் காரைக்கால் நிரவி பகுதியை சேர்ந்த சிவானி என்ற திருநங்கையுடன் திலீப்பிற்கு பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளன்னர்.

கடந்த 6 மாதங்களாக இருவரும் காதலித்துவந்த நிலையில், இந்த விவகாரம் திலீப்பின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததை அடுத்து இந்த காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனனர். இதனிடையே தனது காதலியை அழைத்துக்கொண்டு திலீப் வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் இருவரும் கணவன், மனைவியாக வாழ தொடங்கியுள்ளனர்.

Love

இருப்பினும் திலீப்பின் குடும்பத்தினர் இடைவிடாது தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் மகிழ்ச்சியாக சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் திலீப் - சிவானி இருவருக்கும் இடையே சண்டை வர தொடங்கியுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிடலாம் என முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில்தான் அவர்கள் வசித்துவந்த வீட்டின் கதவு முன்தினம் இரவு பூட்டப்பட்ட நிலையில் நேற்று வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.

வீட்டில் தனி தனி அறையில் திலீப்பும், சிவானியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருவரின் உடல்களையும் கைப்பற்றிய போலீசார் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.