திமுகவின் பழிவாங்கும் அரசியலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி - வானதி ஸ்ரீனிவாசன் உறுதி.!



bjp-mla-vanathi-srinivasan

 

பழிவாங்கும் அரசியலை செய்யும் திமுகவின் செயல் கண்டிக்கத்தக்கது என வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். 

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக எம்.எல்.ஏ வானதி, "தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சனை, போதைப்பொருட்கள் விற்பனை அதிகம் நடக்கிறது. இதனை தடுக்க திறன் இல்லாத அரசாக திமுக அரசு இருக்கிறது.

திமுக அரசின் பழிவாங்கும் செயல்:

இந்த விவகாரங்களை குறிப்பிட்டு பேசி அரசை விமர்சிக்கும் நபர்களை பழிவாங்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. பெண்களை இழிவுபடுத்தும் நபர்களை கைது செய்ய வேண்டும்.

சர்ச்சை செயலுக்கு விரைவில் முற்றுப்புள்ளி உறுதி:

ஆனால், அவ்வாறு அரசு உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதி திமுகவினரை கைது செய்தாகியிருக்க வேண்டும். திமுகவின் இவ்வாறான பழிவாங்கும் அரசியல் என்பது விரைவில் முற்றுப்புள்ளியை சந்திக்கும்: என கூறினார்.