சாத்தான்குளம் விவகாரம்! தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை!

சாத்தான்குளம் விவகாரம்! தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை!



Banned friends of police

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகள் காவல்துறை விசாரணையில் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் தொடர்புடைய பல போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் காவல்நிலையத்தில் தந்தை - மகன் இருவரையும் தாக்கியதில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸிற்கும் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் சில பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்களையும் கைது செய்து தீவிர விசாரணை செய்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் இணையத்தில் குரல் கொடுத்து வருகின்றனர்.

fob

இந்தநிலையில், சமீபத்தில் குறிப்பிட்ட மாவட்டத்தில், பிரண்ட்ஸ் ஆப் போலீசுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் காவல் நிலையத்திற்குள் பிரண்ட்ஸ் ஆப் போலீசை அனுமதித்தால் சம்பந்தப்பட்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருச்சி சரக டிஐஜி தெரிவித்திருந்தார். 

இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் தடை விதிக்கப்படுவதாக தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.