நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!

நிர்மலாதேவிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு!



arrest warrant for nirmala devi


அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர் தற்போது சிறையில் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்துள்ள நிலையில், பேராசிரியர் நிர்மலாதேவி இன்று  ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டது.

nirmala devi news

ஆனால் இந்த வழக்கு தொடர்பாக முருகன் மற்றும் கருப்பசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இது குறித்து தெரிவித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர், பேராசிரியர் நிர்மலாதேவி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அதனால் வழக்கு விசாரணைக்கு இன்று  ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.