பிரக்ஞானந்தாவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்கிய கழக அரசு!!

பிரக்ஞானந்தாவுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்கிய கழக அரசு!!



Appreciation and appraisal for praggnanandhaa

செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து.

தமிழ்நாட்டின் எளிய குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய அயராத உழைப்பாலும் - தாயார் ஊட்டிய தன்னம்பிக்கையாலும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற #FIDEWorldCup2023-ல் 2-ஆம் இடத்தை பிடித்துள்ள செஸ் கிராண்ட் மாஸ்டர் தம்பி பிரக்ஞானந்தாவுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், கழக அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.30 லட்சத்தை வழங்கிய நிகழ்வில் இன்று பங்கேற்றோம்.

செஸ் விளையாட்டில் இளம் வயதிலேயே பிரக்ஞானந்தா எட்டியுள்ள உயரங்கள், இன்னும் பல பிரக்ஞானந்தாக்களை உருவாக்கும் என்பதில் சந்தேகமில்லை. 

இந்திய ஒன்றியத்தில் செஸ் விளையாட்டின் முகமாகத் திகழும் தமிழ்நாடு, உலக அரங்கிலும் தனி இடத்தை பிடிக்க காரணமான தம்பி பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துகள். என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.