காஞ்சிபுரம்: "குழந்தையை பார்த்துக் கொள்வது தான் உன் வேலை..." கண்டித்த கணவர் ..... மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு.!

காஞ்சிபுரம்: "குழந்தையை பார்த்துக் கொள்வது தான் உன் வேலை..." கண்டித்த கணவர் ..... மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு.!



an-young-woman-killed-her-child-and-commits-suicide-aft

வேலைக்கு எல்லாம் செல்ல வேண்டாம் குழந்தையை கவனித்துக் கொண்டு வீட்டில் இருந்தாலே போதும் என கணவன் கூறியதால் மனம் உடைந்த மனைவி தனது மூன்று வயது ஆண் குழந்தையை கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட செட்டிகுளம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார். இவர் சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கும் பொறியியல் பட்டதாரியான சரண்யா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு  மூன்று வயதில் ஜிஷ்ணு  என்ற ஆண் குழந்தை இருந்தது.

kanchipuram

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு  நினைவுத்திறன் வளர்க்கும் பயிற்சி மையம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்து சென்று வந்திருக்கிறார் சரண்யா. இது தொடர்பாக அவருக்கும் அவரது கணவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. வேலைக்குச் செல்ல வேண்டாம் குழந்தையை பார்த்துக் கொண்டாலே போதும் எனக்கு கூறி இருக்கிறார் அவரது கணவர் மதன்குமார்.

இதனால் ஏற்பட்ட விரக்தியில் வீட்டில் ஆள் இல்லாத போது தனது குழந்தையோடு சேர்ந்து  சரண்யாவும் தூக்கு போட்டு தற்கொலை செய்து இருக்கிறார். இது தொடர்பாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாய் மற்றும் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மதன்குமார் மற்றும் அவரது  குடும்பத்தினரிடம் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். திருமணம் ஆகி சில வருடங்களாகி இருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.