சிறுமியை திருட்டு கல்யாணம் செய்த இளைஞரை கண்டித்ததால்.. காதலர்கள் தற்கொலை...!

சிறுமியை திருட்டு கல்யாணம் செய்த இளைஞரை கண்டித்ததால்.. காதலர்கள் தற்கொலை...!



After condemning the young man who stole and married the girl.. Lovers committed suicide.

நாசரேத் அருகே பெற்றோர் கண்டித்ததால் இளம் காதல் ஜோடியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். 

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே உள்ள சின்னமாடன் குடியிருப்பில் வசித்து வரும் தாசன் என்பவரின் மகன் விஜய்(17). இவர் பனைஏறும் தொழில் செய்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த சுடலைமணி மகள் மேகலா (16). இருவரும் உறவினர்கள். இந்நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் சில மாதங்களுக்கு முன்பு ஊரைவிட்டு ஓடிப்போய் கோவிலில் தாலி கட்டி குடும்பம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் தனது மகளை காணவில்லை என பெண்ணின் தந்தை நாசரேத் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.  நாசரேத் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை திருமணம் செய்தாக குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விஜயை கைது செய்தனர். மேலும் மேகலாவை அவரது பெற்றோரிடம் ஓப்படைத்தனர். இந்நிலையில் சிறையில் இருந்து விடுதலையான விஜய், மீண்டும் மேகலாவிடம் பழகியுள்ளார். இதனால் பெற்றோர்கள் இவர்களை கண்டித்தனர்.

இதனால் இருவரும் விரக்தி அடைந்து நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இன்று காலை சின்னமாடன் குடியிருப்பு பகுதியில் உள்ள குளக்கரையில் விஷம் குடித்து இறந்து கிடந்தனர். அவர்கள் அருகில் விஜய் ஓட்டி சென்ற பைக் இருந்தது. இதுகுறித்து விஜயின் தந்தை தாசன் நாசரேத் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம் காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது நாசரேத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.