முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்...!!
முன்விரோதம் காரணமாக இரும்பு கம்பியால் கொடூரமாக அடித்து கொலை செய்யப்பட்ட இளைஞர்...!!
புதுக்கோட்டை, கீரனூர் அருகே முன்விரோதம் காரணமாக விக்னேஸ்வரன் என்ற இளைஞர் இரும்புக் கம்பியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
விக்னேஸ்வரன் தனியார் வங்கி ஒன்றில் மேனேஜராக உள்ளார். இவரை இரும்பு கம்பியால் குத்தி கொலை செய்துள்ளனர். மேட்டுப்பட்டி பிடாரியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
விக்னேஸ்வரனை கொலை செய்தவர்களை பிடிக்கக் வேண்டும் என்று விக்னேஸ்வரனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் கீரனூர் அரசு மருத்துவமனை கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
இந்நிலையில், காவல்துறையினர் ராமலிங்கம் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.