வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த காட்டு யானை... தப்பி ஓட முயன்ற பெண்ணுக்கு நிகழ்ந்த சோகம்...



a-wild-elephant-broke-the-house-and-attached-one-lady-i

நீலகிரி மாவட்டம் ஓவேலி நம்பர் 4 ஆம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி மகாலெட்சுமி இன்று அதிகாலை அவரது வீட்டில் அசந்து தூங்கி கொண்டுள்ளார். இந்நிலையில் காட்டு யானை ஒன்று மகாலெட்சுமியின் வீட்டின் அருகே வந்துள்ளது.

வீட்டின் அருகே வந்த காட்டு யானை திடீரென வீட்டை தாக்கி தேசப்படுத்தியுள்ளது. அதில் மகாலெட்சுமி அதிர்ச்சியுடன் விழித்தெழுந்து யானை பார்த்த பயத்தில் வீட்டிலிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.  அப்போது யானை தும்பிக்கையால் மகாலெட்சுமியை தாக்கி விட்டு காட்டிற்குள் சென்று மறைந்தது.

Nilakiri

அதனையடுத்து படுகாயம் அடைந்த மகாலெட்சுமி அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வனத்துறை ஊழியர்கள் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.