தேனிலவுக்கு போன தமிழக தம்பதி... நீரில் மூழ்கி பரிதாப பலி.! உற்சாக பயணம் இறுதி பயணமான சோகம்.!
தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ தம்பதி லோகேஸ்வரன் - விபூஷணியா. இவர்கள் இருவருக்கும் கடந்த ஜூன் மாதம் 1ம் தேதி பூந்தமல்லியில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
இன்பமாக தங்களின் இல்லற வாழ்க்கையை தொடங்கிய புதுமண தம்பதி, தேனிலவுக்கு இந்தோனேஷியாவுக்கு சுற்றுலா சென்றது.

அங்குள்ள பாலி தீவுகளில் தம்பதி சுற்றுலா சென்ற சமயத்தில், அதிவேக படகில் பயணம் செய்ததாக தெரியவருகிறது. அப்போது நடந்த எதிர்பாராத விபத்தில் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.