வயிற்று வலியால் துடித்த மாணவி.. தவறுதலாக ஹேர் டை குடித்து பலியான சோகம்.!

வயிற்று வலியால் துடித்த மாணவி.. தவறுதலாக ஹேர் டை குடித்து பலியான சோகம்.!



A student suffering from stomach ache.. She accidentally drank hair tie and died.


 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆா்.சி.வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் மீன் வியாபாரியான பேச்சிமுத்து.  இவர் தனது மனைவி, இருமகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்  பேச்சிமுத்து மகள் பூஜாபேபி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

பூஜாபேபி கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மீன் வியாபாரத்திற்கு பெற்றோர் சென்றுவிட்டதால் பூஜாபேபி தனியாக வீட்டில் இருந்துள்ளார். அப்போது பூஜாபேபிக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

Student suffered

இதனையடுத்து வயிற்று வலியால் துடித்த பூஜாபேபி வயிற்று வலி மருந்து என்று நினைத்து வீட்டில் இருந்த ஹார் டையை குடித்ததால் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார். இந்த நிலையில் வியாபாரம் முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர் மயங்கிய நிலையில் இருந்த மகளை பார்த்து பதறிப்போய் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் பூஜாபேபி மயக்க நிலையிலே இருந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனையடுத்து அங்கு மாணவி பூஜாபேபிக்கு மருத்துவர்கள் முதலுதவி செய்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த பூஜாபேபி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து வந்த  சாத்தான்குளம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.