ஆசையாக உறவினர் வீட்டிற்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வத்தலகுண்டு அருகே பரபரப்பு.!

ஆசையாக உறவினர் வீட்டிற்கு சென்ற நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வத்தலகுண்டு அருகே பரபரப்பு.!



A shock awaits the person who went to his relative's house on a whim.. There is excitement near Wattalagundu.

வத்தலக்குண்டு விவேகானந்த நகரில் தனது குடும்பத்தோடு குமரன் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் விவசாயம் செய்துள்ளார்.

இந்நிலையில் குமார் குடும்பத்தினரோடு தனது உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து இவர் சென்ற அடுத்த நாள் காலை குமார் வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் குமாருக்கு ஃபோன் செய்து தகவல் தெரிவித்துள்ளனர். 

Shoking

இதனை தொடர்ந்து வெளியூரிலிருந்து அங்கு விரைந்து வந்த குமார் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோவில் இருந்த 12 பவுன் நகை மற்றும் 2 லட்சம் பணம் திருடு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி குமார் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலிசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பூட்டி இருந்த வீட்டில் நகை மற்றும் பணம் திருடு போன சம்பவம் அந்த பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.