மொட்டை மாடியில் விளையாடிய 4½ வயது சிறுமி.! 6 இளைஞர்கள் செய்த கொடூரம்.! நேரில் பார்த்து பதறிய தாய்.! அதிர்ச்சி சம்பவம்.!

மொட்டை மாடியில் விளையாடிய 4½ வயது சிறுமி.! 6 இளைஞர்கள் செய்த கொடூரம்.! நேரில் பார்த்து பதறிய தாய்.! அதிர்ச்சி சம்பவம்.!



6 person arrested for child abuse case

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்த 43 வயதுடைய இளம்பெண் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக 2 குழந்தைகளுடன் வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் அனைவரும் வீட்டிலேயே இருந்து வருகின்றனர். இதனையடுத்து தினமும் அவரது மகளான 4½ வயது சிறுமி வீட்டின் மொட்டை மாடிக்கு சென்று விளையாடுவது வழக்கம்.

இந்தநிலையில், சம்பவத்தன்று மாலை சிறுமி மொட்டை மாடிக்கு சென்று விளையாடியுள்ளார். அப்போது இவர்கள் வீட்டின் கீழ் பகுதியில் வசிக்கும் சையத் அக்ரம் என்பவரும் அவரது நண்பர்கள் 5 பேரும் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குழந்தையை காணவில்லை என்று அவரது தாய் மொட்டை மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது அக்ரம் மற்றும் அவரது நண்பர்கள் குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். 

arrest

இதுகுறித்து சிறுமியின் தாய்  மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சையத் அக்ரம், அப்துல் முகமது யாகூப், நாகூர் கனி, யூசுப் அன்சாரி, சுலைமான், விஜயராகவன் ஆகிய ஆறு பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.