#Breaking:சென்னை, விழுப்புரம் உட்பட 6 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!
#Breaking:சென்னை, விழுப்புரம் உட்பட 6 மாவட்டங்களில் 3 மணிநேரத்திற்கு மிதமான மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் திருவண்ணாமலை ஆகிய 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.