அப்பளம் போல் நொறுங்கிய கார்!.. 5 பேர் படுகாயம், ஒருவர் கவலைக்கிடம்: தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு..!

அப்பளம் போல் நொறுங்கிய கார்!.. 5 பேர் படுகாயம், ஒருவர் கவலைக்கிடம்: தேசிய நெடுஞ்சாலையில் பரபரப்பு..!



5-people-were-injured-in-the-car-that-was-crushed-like

மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி கேரள அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்தது. தமிழக-கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டையை அடுத்த ஆரியங்காவு வாகன சோதனைசாவடி அருகே அந்த பேருந்து வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த சொகுசு கார், பஸ் மீது பயங்கரமாக மோதியது.

எதிர்பாராத நேரத்தில் நடந்த இந்த விபத்தில், கார் முழுவதுமாக சேதம் அடைந்து அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தென்மலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயம் அடைந்த 5 பேரையும் மீட்டு புனலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயம் அடைந்தவர்களில், ஒருவர் மேல்சிகிச்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தென்மலை காவல் நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், காயம் அடைந்த 5 பேரும் கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள காஞ்சிரம்பள்ளி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

விபத்தில் சிக்கியவர்களின் பெயர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்தால் மதுரை-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சீர்செய்யும் பணியில் காவல்தூறையினர்தீவிரமாக ஈடுபட்டனர்.