அப்பாவின் தோளுக்கு பின், அழகரை நேரில் நெருங்கிப்பார்த்த நடிகர் சூரி; மனம்நெகிழ்ந்து பதிவு.!
சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து.! கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து.! 5 பேர் பலி.!
சென்னை நோக்கி வந்த அரசு பேருந்து.! கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதி விபத்து.! 5 பேர் பலி.!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த பேருந்து தொழுப்பேடு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து வேகமாக வந்துகொண்டிருந்த லாரி மீது மோதியது.
இந்த கோர விபத்தில் பேருந்தின் ஒரு பகுதி முழுவதுமாக சேதம் அடைந்து. பேருந்தில் பயணித்த பயணிகள் படுகாயங்களுடன் அலறி துடித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு நடந்த கோர விபத்தில் 2 பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசுர வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடந்த சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.