3 சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. 9 வயது சிறுவன் கைது.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!



3 school girls harassment in Chennai

சென்னையில் 3 பள்ளி மாணவிகளை அடையாளம் தெரியாத நபர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள கார்ப்பரேஷன் ஆரம்பம் மற்றும் நடுநிலைப் பள்ளியில் படித்து வந்த மூன்று மாணவிகள் அடையாளம் தெரியாத நபரால் பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி வளாகத்திற்கு வெளியே அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

chennai

இது குறித்த புகாரின் பேரில் கடந்த ஜனவரி 23ஆம் தேதி முதல் திருவான்மியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அடையாளம் தெரியாத அந்த நபர் மாணவிகளையும் அவர்களது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக அச்சுறுத்தியதால் மாணவிகள் பயந்து இது குறித்து வெளியில் சொல்லவில்லை.

இதில், அந்த மாணவிகளை அதே பள்ளியில் படிக்கும் 9 வயது சிறுவன் அந்த அடையாளம் தெரியாத நபரிடம் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நான்காவதாக ஒரு சிறுமியையும் அந்த ஒன்பது வயது சிறுவன் அந்த நபரிடம் அழைத்து சென்றுள்ளார்.

chennai

ஆனால் அந்த சிறுமி தப்பித்து வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார். இதனையடுத்து மற்ற மாணவிகளும் பெற்றோரிடம்  நடந்ததை கூறிவிட்டனர். இதனையடுத்து இந்த வழக்கில் மாணவிகளை அழைத்து சென்ற ஒன்பது வயது சிறுவன் மற்றும் அவனது தாயிடம் திருவான்மியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.