#Breaking: ஆசிரியரை வெறியோடு விரட்டி விரட்டி இழுத்துப்போட்டு அடித்த விவகாரம்; 3 கயவர்கள் அதிரடி கைது.!

#Breaking: ஆசிரியரை வெறியோடு விரட்டி விரட்டி இழுத்துப்போட்டு அடித்த விவகாரம்; 3 கயவர்கள் அதிரடி கைது.!



3 members arrested by police teacher attacking case

ஆசிரியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எட்டையபுரம், கீழநம்பியார் கிராமத்தில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பாரத் என்பவர் பணியாற்றி வந்துள்ளார்.இன்று காலை குழந்தைகள் வழக்கம்போல பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். 

அப்போது, பள்ளியில் படித்து வரும் மாணவன் செய்த தவறை ஆசிரியர் கண்டித்ததாக தெரியவருகிறது. இதுகுறித்து மாணவன் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து ஆசிரியை, ஆசிரியரை தாக்கி இருக்கின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம்

தாங்கள் மாணவரை தாக்கவில்லை என கூறியும் பலன் இல்லாது, விரட்டி விரட்டி கொடூரமாக ஆசிரியர்கள் தாக்கப்பட்டனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானது. இதனையடுத்து, விசாரணையை அதிகாரிகள் முன்னெடுத்தனர். ஆசிரியர்கள் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டன.

இந்நிலையில், சிவலிங்கம், சிவலிங்கத்தின் மனைவி செல்வி, மாமனார் முனியசாமி ஆகியோர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் மீது கொலை முயற்சி உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.