ஆவேசத்துடன் அக்கா கணவரை தீர்த்து கட்டிய 15 வயது தம்பி.! ஏன்? என்னதான் காரணம்?? பகீர் சம்பவம்!!

ஆவேசத்துடன் அக்கா கணவரை தீர்த்து கட்டிய 15 வயது தம்பி.! ஏன்? என்னதான் காரணம்?? பகீர் சம்பவம்!!



15-year-young-boy-killed-his-brother-in-law

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே பாகோடு மாணிக்கவிளைப் பகுதியில் வசித்து வந்த விஜயகுமார் என்பவரது மகன் 22 வயது நிறைந்த பிஜு. கூலி வேலை செய்து வந்த அவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம் பெண்ணை காதலித்து கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 11 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிஜு அதிகளவில் குடித்துவிட்டு வந்த தினமும் வீட்டில் சண்டை போட்டுள்ளார். இதனால் கணவன், மனைவிக்கிடையே தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வாறு கடந்த இரு தினங்களுக்கு முன்பு பிஜுவிற்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், அந்த பெண் குழந்தையை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.

Murder

அங்கு குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் பிஜு மனைவியின் வீட்டிற்கு சென்று குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருந்து வாங்கி கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டில் விட்டுள்ளார். அப்பொழுதும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அதனை கண்டுகொண்டிருந்த மனைவியின் 15 வயது தம்பி அரிவாளை எடுத்து,  'நீ தினமும்  குடித்துவிட்டு வந்து என் அக்காவிடம் சண்டை போட்டு அடித்து கொடுமைப்படுத்துகிறார்.. இனி நீ உயிரோடு இருக்கக் கூடாது' என கூறி கொண்டே பிஜுவின் தலையில் இருமுறை வெட்டியுள்ளார்.

இந்நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் அந்த சிறுவனின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.