42 வயதில் இரட்டை குழந்தைகளை ஈன்றெடுத்த தமிழ் சீரியல் நடிகை; குவியும் வாழ்த்துக்கள்.!
கடன் தகராறால் அவமானம்.. 11ம் வகுப்பு பள்ளி மாணவி தற்கொலை!
![11th std girl suicide for fight with mom](https://cdn.tamilspark.com/large/large_fire-51937.jpg)
தஞ்சாவூர் மாவட்டம் மானம்பூச்சாவடி பகுதியில் உள்ள இடையர் தெருவில் வசித்து வருபவர் கதிரேசன். இவர் தஞ்சாவூரில் பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி செல்வகுமாரி. இந்த தம்பதியினருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகள் காவிய பிரியா தஞ்சாவூரில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் செல்வகுமாரி கடந்த ஆண்டு தனது வீட்டிற்கு அருகே உள்ள பெண் ஒருவரிடம் கடன் கொடுத்துள்ளார். இந்தக் கடனை திருப்பி கேட்கும் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதனையடுத்து மாணவி காவிய பிரியா இது குறித்து தாயிடம் தகராறு செய்ய வேண்டாம் எனவும் அவமானமாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் தாய்க்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவி மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து மாணவி காவிய பிரியா தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில், வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். இதனையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மாணவியை மீட்டு தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனுடைய போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பயந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.