16 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.. வெளியான அதிர்ச்சி தகவல்.!



10th std suicide in Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் வசித்து வருபவர் கணேசன். கூலி தொழிலாளியான இவருடைய மகள் சுபிக்ஷா. இவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

Krishnagiri

இந்த நிலையில் சமீபத்தில் பள்ளியில் நடந்த மாதாந்திர தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்துள்ளார். இதனையடுத்து ஆசிரியர்கள் மாணவியின் பெற்றோரை அழைத்து மதிப்பெண்கள் குறைவாக வாங்கியது குறைத்து மாணவியை கண்டித்துள்ளனர்.

அதன் பின்னர் வீட்டிற்கு வந்த பிறகு பெற்றோர் மகளை கடுமையாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மணமுடிந்த மாணவி சுபிக்ஷா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Krishnagiri

இதனையடுத்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தற்கொலைக்கான காரணம் வேறு ஏதேனும் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.