பள்ளி மாணவியை ஆபாசமாக படமெடுத்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் செய்த மோசமான செயல்.! மாணவி எடுத்த விபரீத முடிவு.!

பள்ளி மாணவியை ஆபாசமாக படமெடுத்து உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் செய்த மோசமான செயல்.! மாணவி எடுத்த விபரீத முடிவு.!



10th class student intimidated and sexually abused

10 ஆம் வகுப்பு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய உடற்பயிற்சி கூட பயிற்சியாளர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் அருகே காக்களூர் பகுதியில் அரவிந்தன் என்ற இளைஞர் உடற்பயிற்சி கூடம் வைத்து நடத்தி அதில் பயிற்சியாளராக இருந்துவருகிறார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் இவர்கள் இருவரும் நெருக்கமாக இருக்கும்போது அந்த மாணவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இந்தநிலையில் மாணவியை தனது செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அச்சிறுமி பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் குறித்து அறிந்த பெற்றோர் அதிர்ச்சியடைந்து காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து போலீசார் அரவிந்தனை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.