கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்... இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அறிவிப்பு.!

கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்... இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அறிவிப்பு.!



Sreesanth retires from local cricket

இந்திய அணிக்காக 27 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 87 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 53 ஒருநாள் போட்டிகளில் 75 விக்கெட்டும், 10 டி20 போட்டிகளில் 7 விக்கெட்டும் கைப்பற்றியிருக்கிறார் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த். 

சூதாட்ட குற்றச்சாடுகளால் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகப்பெரிய தடை ஏற்பட்டது. அதிலிருந்து மீண்டு முதல் தர  கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஸ்ரீசாந்த், அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். 

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்த ஸ்ரீசாந்த், இந்தியாவுக்காக விளையாடி எனது குடும்பம், எனது அணியினர் மற்றும் இந்திய மக்களை பிரதிநிதித்துவப்படுத்தியதை எனக்கு கிடைத்த கவுரவமாக நினைக்கிறேன், என கூறி உள்ளார். மிகுந்த வருத்தத்துடன் கனத்த இதயத்துடன் இதைச் சொல்கிறேன். நான் இந்திய உள்நாட்டு (முதல் வகுப்பு மற்றும் அனைத்து வடிவங்கள்) கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்காக, எனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்ள தேர்வு செய்துள்ளேன்.

இந்த முடிவு என்னுடையது மட்டுமே, இது எனக்கு மகிழ்ச்சியைத் தராது என்று எனக்குத் தெரிந்தாலும், என் வாழ்க்கையில் இந்த நேரத்தில் எடுப்பது சரியான மற்றும் மரியாதைக்குரிய செயல். ஒவ்வொரு கணத்தையும் நான் நேசித்தேன் என ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.